Skip to main content

வாழ்வு என்னும் அற்புதம்

வாழ்வு என்னும் அற்புதம்

போர்க்களமாய் இருக்கும்

இவ்வுலகில் தான்

அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன

பூ பூக்கிறது

மழை பெய்கிறது

குழந்தை பிறக்கிறது

காதல் பிரிகிறது

திருமணம் நடக்கிறது

வாழ்வு முடிகிறது

எல்லாம் முடித்த பின்னும்

அசையா பொழுதுகளில் 

பறவை வந்து என்னை

கடந்த பாதையை நோக்கிச் 


அழைத்துச் சென்று கூறியது 

"காற்றுக்கு நிதானம் அவசியம் தான்

இருந்தும் அதன் போக்கில் அடித்துச் செல்கிறது;

அப்படித்தான் வாழ்வும்!" 



ஆர். நவின் குமார்
13/6/2022

Comments

Popular posts from this blog

கிருமி கதைகள் வாசிப்பு அனுபவம்

கிருமி கதைகள் மொழிபெயர்ப்பு : நரேன் கொரோனா பெரும் தொற்று நமக்கு பல பாடங்களை கற்றுத்தந்தது தனிமனித இடைவெளி தொடங்கி சுய  ஒழுக்கம் வரை. மொத்தம் பத்து கதைகள் இந்த புத்தகத்தில்   ஒவ்வொரு கதையும் நம்முள் பல கேள்விகளையும் பதில்களையும் விட்டு செல்கின்றன பெருந்தொற்று, நோய்தொற்று காலங்களையுடன் சேர்த்து அறிவியில் புனைவுகளுடன் கலத்த யதர்த்தம், த்ரில்லர்களையும் இக்கதைகள் கூறுகின்றன. நோய் மீதான மனிதனின் பயமும் அதனால் தன்னை தற்காத்துகொள்ள மேற்கொள்ளும் செயல்கள் அகத்தாலும் புறத்தாலும் அவன் கண்டடையும் சித்திரங்களை இந்த கதைகள் கூறுகின்றன. மேலும் சில கதைகள் நோய் தொற்று கலந்த   அரசியல் நுண்ணறிவையும் கூறுகின்றன. எழுத்தாளர் நரேனின் மொழிபெயர்பு வாசிக்க தடையின்றி உள்ளது. பல அறிவியல் புனைவு எழுத்தாளர்களையும் ,ஆங்கில த்ரில்லர் எழுத்தாளர்களை தமிழில் அறிமுகம் செய்துள்ளார் மொழிபெயர்பாளர் நரேனுக்கு வாழ்த்துகளும் நன்றியும் யாவரும் வெளியீடு நவின் ஆர் குமார் 21/12/2023

சில கவிதைகள்

1) விடைபெறுகிறேன் மொத்தமாக பிரபஞ்ச அலை வரிசைகளில் இருந்து விடை பெற முடிவு செய்தேன் கைகள் அறுத்து இரத்த வெள்ளத்தில் மிதக்கும் உடலை பார்த்துக் கொண்டே இருக்கிறேன் கடைசி உயிர் நாடி வரை ரசிக்க முடிவு செய்து இம்முடிவை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறேன். முடியும் வரை முயன்று விடைபெற்று  அலைவரிசையின் கடைசி நாடியில் உயிர் பிரிந்ததும் பெளர்ணமி தினத்தில் நட்சத்திரமாய் ஒளிர்வேன். 2) ஈரப்பு திசை இரும்பு துகள்களின் எச்சங்களால்  என் குடும்பம் பூமிக்கு வந்தது போட்டி,  பொறாமை,  நம்பிக்கை,  துரோகம்,  இவ்வனைத்தும் விளையாட்டின் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது யூகங்கள் மாற மாற  தியான புத்தனும் விளித்து கொண்டு  மரணப் பாதைதான்  என் குடும்பத்தின் மூக்த்தி நிலையை தெரிவித்தது ஆலமர கிளை நிழலில் ஆச்சி இறந்ததும் குடும்ப மரம் சிதறி சிதறி துகளானது 3) நிழல் இல்லாத கடல் நிழல் இல்லாமல் நான் கடலுக்கு சென்றதில்லை நேற்று இரவு தான் நிழல் இல்லாமல் சென்று வந்தேன் கடல் எனக்கு சற்று நிதானமாக அலைகள் மூலம் ஆறுதல் கூறியது நான் அலைகளுக்கு கைகளால் வருடி நன்றி கூ...

சில கவிதைகள்.....

1) மிருகம் மனவெளி பறவையாய் என்னை சபித்து கொண்டேன் பெளர்ணமி இரவு வெளிச்சத்தில் ஆற்றின் நடுவில் குதித்து குளிக்க ஆசைபட்டேன் அசட்டுதனங்களால் என்னை உருவகித்தேன் புன்னகையின் வைரமாய் என்னை ஆட்கொண்டேன் பூமி எங்கும் மனவெளி பறவையாய் பறக்க முயன்று முயன்று கடைசியில் தோற்றுபோய் நாக்கின் வெக்கைக்கு நடுவே நின்று  மீண்டும் தோற்கிறேன் 2) ஆகசோதி மரணித்த பொழுதுகளில்  வாழ்வின்பிரகாசம் பெரு வெளிச்சமாக தெரியும் நம்மை சுற்றி நாலுபேர் குளிர்காய்வார்கள் நாமும் படுத்திருப்போம் நான்குஅடி சாஸ்திர பெட்டிக்குள் 3) வளர்ச்சி பூமி  பரிணாம வளர்ச்சியில் இருந்தபோது என் வாலில் கட்டி  பால்வெளி எங்கும் வலம்வந்தேன் பாரம் தாங்காமல் பூமி வாலில் இருந்து உருண்டு உருண்டு பந்தானது        −ஆர்.நவின் குமார்          10/10/2021