Skip to main content

பழைய கவிதைகள் -1


யாவரும் இணைய இதழ்  - அக்டோபர் 2020  வெளிவந்தவை

01

ஆழக்கடலின்
ஆக்ரோச அலை
வந்தும் சென்றுவிடவில்லை.
கரையைச் சற்று முத்தமிட்டு
மெல்ல பின்வாங்குகிறது,
சூன்யம் வந்து இருளை கவ்வுகிறது
கடலைவிட்டு
கடல்
நகர்ந்து செல்வது இனிதே.

***

02

நிசப்தம் அணைத்துக் கொண்ட
பிறகு தான்
சூன்யம் இருளை ஆக்கிரமிக்கிறது.

***

03

வீட்டின் நடுவில் ஊசல் ஆடுகிறது
ஆச்சியின் உயிர்
உயிரின் ஊசல் இறப்பின்
அறிகுறிச்செய்தி
ஊசலுக்குப் பிறகு தான்
ஆன்மா பிரிவுக்கு
காற்றிடம் பேசிய பிறகு தான்
மண்ணை முத்தமிடுகிறது
உதிர்ந்த சருகு.

***


படிக்க நவீன் கவிதைகள்

Comments

Popular posts from this blog

கிருமி கதைகள் வாசிப்பு அனுபவம்

கிருமி கதைகள் மொழிபெயர்ப்பு : நரேன் கொரோனா பெரும் தொற்று நமக்கு பல பாடங்களை கற்றுத்தந்தது தனிமனித இடைவெளி தொடங்கி சுய  ஒழுக்கம் வரை. மொத்தம் பத்து கதைகள் இந்த புத்தகத்தில்   ஒவ்வொரு கதையும் நம்முள் பல கேள்விகளையும் பதில்களையும் விட்டு செல்கின்றன பெருந்தொற்று, நோய்தொற்று காலங்களையுடன் சேர்த்து அறிவியில் புனைவுகளுடன் கலத்த யதர்த்தம், த்ரில்லர்களையும் இக்கதைகள் கூறுகின்றன. நோய் மீதான மனிதனின் பயமும் அதனால் தன்னை தற்காத்துகொள்ள மேற்கொள்ளும் செயல்கள் அகத்தாலும் புறத்தாலும் அவன் கண்டடையும் சித்திரங்களை இந்த கதைகள் கூறுகின்றன. மேலும் சில கதைகள் நோய் தொற்று கலந்த   அரசியல் நுண்ணறிவையும் கூறுகின்றன. எழுத்தாளர் நரேனின் மொழிபெயர்பு வாசிக்க தடையின்றி உள்ளது. பல அறிவியல் புனைவு எழுத்தாளர்களையும் ,ஆங்கில த்ரில்லர் எழுத்தாளர்களை தமிழில் அறிமுகம் செய்துள்ளார் மொழிபெயர்பாளர் நரேனுக்கு வாழ்த்துகளும் நன்றியும் யாவரும் வெளியீடு நவின் ஆர் குமார் 21/12/2023

இறுதி விடுதலை - குறுங்கதை

இறுதி விடுதலை - நவின் ஆர் குமார்  பக்கத்து படுகையில் இருந்த  நோயாளியின் உடல் அலைகள் போல் மேலெழுந்து சாந்தமானது. சின்ன பையன் தற்கொலைக்கு முயற்சி செய்து பக்கத்தில் படுக்கையில் கிடந்தான். அவனை இறப்பு அணைக்க தொடங்கியதும் எனக்கு பயம் தீயன அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு வேளை அவன் தற்கொலையில் வெற்றி அடைந்து இருந்தால் என் பக்கத்தில் இருந்து இருக்க மாட்டான். நானும் அவனை போல் அடி அடியாக தற்கொலைக்கு முயன்று . தற்போது அவன் பக்கத்தில் படுத்துள்ளேன். பிறந்ததிலிருந்தே பெயர் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். நானும் அவனும் சதுரங்க போட்டியில் தோல்வியுற்று வலியில் துடித்துக் கொண்டு இருக்கிறோம் என புரிந்தது. பெயர் தெரியாத நோய்மையின் தாக்கம் தாங்க முடியாமல் நானும் தற்கொலை முயற்சி செய்து தோற்று போய் உள்ளேன். அவனும் அப்படி தான் தனது தீராத காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று தோற்றுள்ளான். இறப்பின் வெற்றி புள்ளியின் மையத்திற்கு அருகில் சென்று தோல்வியடைந்துள்ளோம். இன்ப துன்ப பாகுபாடுயின்றி வெற்றியின் இலக்கை நோக்கிய மனித ஆத்மா பயணம் தொடர்கிறது. நானும், என் உற்ற பக்கத்து படுக்கை நண்பனும் தற்கொலையின...

சில கவிதைகள்

1)தனிமை எங்கும் இல்லாத தனிமையை தேடுகிறது ஆன்மா  நிறைவேறாத ஏக்கத்தின் பரிதவிப்பில்  விளையாட்டாக  தனிமையை  நாடிச் சென்றது ஆன்மா 2) ஏக்க மலர் அப்பாவிடம் சொல்லி வாங்க முடியும் என்ற நம்பிகையில் மாத கடைசியில் சைக்கிள் கேட்ட பிள்ளை எப்போது வரும் என்ற ஏக்கதில் இரவில் ஏக்கம் மொட்டாகவும்  பகலில் மலராவும்  வாடாமல் இருக்கிறது. நவின் ஆர் குமார் 19/08/2024