யாவரும் இணைய இதழ் - அக்டோபர் 2020 வெளிவந்தவை
01
ஆழக்கடலின்
ஆக்ரோச அலை
வந்தும் சென்றுவிடவில்லை.
கரையைச் சற்று முத்தமிட்டு
மெல்ல பின்வாங்குகிறது,
சூன்யம் வந்து இருளை கவ்வுகிறது
கடலைவிட்டு
கடல்
நகர்ந்து செல்வது இனிதே.
***
02
நிசப்தம் அணைத்துக் கொண்ட
பிறகு தான்
சூன்யம் இருளை ஆக்கிரமிக்கிறது.
***
03
வீட்டின் நடுவில் ஊசல் ஆடுகிறது
ஆச்சியின் உயிர்
உயிரின் ஊசல் இறப்பின்
அறிகுறிச்செய்தி
ஊசலுக்குப் பிறகு தான்
ஆன்மா பிரிவுக்கு
காற்றிடம் பேசிய பிறகு தான்
மண்ணை முத்தமிடுகிறது
உதிர்ந்த சருகு.
***
படிக்க நவீன் கவிதைகள்
Comments
Post a Comment