வாழ்வு என்னும் அற்புதம் போர்க்களமாய் இருக்கும் இவ்வுலகில் தான் அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன பூ பூக்கிறது மழை பெய்கிறது குழந்தை பிறக்கிறது காதல் பிரிகிறது திருமணம் நடக்கிறது வாழ்வு முடிகிறது எல்லாம் முடித்த பின்னும் அசையா பொழுதுகளில் பறவை வந்து என்னை கடந்த பாதையை நோக்கிச் அழைத்துச் சென்று கூறியது "காற்றுக்கு நிதானம் அவசியம் தான் இருந்தும் அதன் போக்கில் அடித்துச் செல்கிறது; அப்படித்தான் வாழ்வும்!" ஆர். நவின் குமார் 13/6/2022
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"