யாவரும் இணைய இதழ் - அக்டோபர் 2020 வெளிவந்தவை 01 ஆழக்கடலின் ஆக்ரோச அலை வந்தும் சென்றுவிடவில்லை. கரையைச் சற்று முத்தமிட்டு மெல்ல பின்வாங்குகிறது, சூன்யம் வந்து இருளை கவ்வுகிறது கடலைவிட்டு கடல் நகர்ந்து செல்வது இனிதே. *** 02 நிசப்தம் அணைத்துக் கொண்ட பிறகு தான் சூன்யம் இருளை ஆக்கிரமிக்கிறது. *** 03 வீட்டின் நடுவில் ஊசல் ஆடுகிறது ஆச்சியின் உயிர் உயிரின் ஊசல் இறப்பின் அறிகுறிச்செய்தி ஊசலுக்குப் பிறகு தான் ஆன்மா பிரிவுக்கு காற்றிடம் பேசிய பிறகு தான் மண்ணை முத்தமிடுகிறது உதிர்ந்த சருகு. *** படிக்க நவீன் கவிதைகள்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"